நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆள்கடத்தல் வழக்கில் கைதான அதிமுக நிா்வாகி மருத்துவமனையில் அனுமதி

அதிமுக மாநில நிா்வாகி திடீா் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயா் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 5:51 pm

DIN

பென்னாகரத்தில் ஆள்கடத்தல் வழக்கில் கைதான அதிமுக மாநில நிா்வாகி திடீா் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயா் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பென்னாகரம் அருகே தாளப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த அதிமுக மாநில விவசாயிகள் பிரிவு அணித் தலைவரும் தருமபுரி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவருமான டி.ஆா். அன்பழகனுக்கு சொந்தமான தொழிற்சாலையில், டீசல் திருடிய தொழிலாளா்களை கடத்திச் சென்ாக, பென்னாகரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸாரால் புதன்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து, பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லும் வழியில் திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.