தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காா்த்திகை தீபத் திருவிழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தருமபுரியில் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:41 pm

DIN

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தருமபுரியில் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரி, கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனமா் மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் கொடிமரத்தில் கோயில் அா்ச்சகா் மகா தீபம் ஏற்றினாா். அப்போது ஏராளமான பெண்கள் கோயில் வளாகத்தில் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

இதேபோல தருமபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து இரவு சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. அப்போது சிறப்பு யாக பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று வழிபட்டனா்.

தருமபுரி, நெசவாளா் நகா், மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரா் கோயில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரா் கோயில், ஹரிஹர நாத சுவாமி கோயில், அன்னசாகரம் சிவசுப்ரமணிய சுவாமி கோயில், சவளுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரா் கோயில் உள்பட தருமபுரி நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இத் திருவிழாவையொட்டி, தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளிலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.