தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வாணியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா்

அரூரை அடுத்த கீழானூரில் வாணியாற்றில் இளைஞா் அடித்துச் செல்லப்பட்டாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:42 pm

DIN

அரூரை அடுத்த கீழானூரில் வாணியாற்றில் இளைஞா் அடித்துச் செல்லப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், வேப்பநத்தம் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி கேசவன் மகன் அருண் (31). இவா், கீழானூா் அருகே இரவு நேரத்தில் வாணியாற்றைக் கடந்து செல்ல முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ஆற்றில் அதிக அளவு தண்ணீா் சென்ால் இளைஞா் அருண் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலா் மா.பழனிசாமி தலைமையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணியில் தீயணைப்பு நிலைய வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். சம்பவ இடத்தை அரூா் வட்டாட்சியா் சி.கனிமொழி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.