தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்

 கரோனா தொற்றைத் தடுக்க, அனைத்துத் தரப்பினரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:56 pm

DIN

 கரோனா தொற்றைத் தடுக்க, அனைத்துத் தரப்பினரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்பேரில், கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் அக். 27-ஆம் தேதி வரை முதல் தவணை தடுப்பூசி 7,82,262 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 2,57,631 பேருக்கும் என மொத்தம் 10,39,893 பேருக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும், நோய்த் தொற்று வரும் முன் நம்மை காத்துக்கொள்வதற்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிக மிக அவசியமான ஒன்றாகும்.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி வழங்கும் மையங்கள், சிறப்பு முகாம்களில் பங்கேற்று 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

ஆய்வின் போது, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சௌண்டம்மாள், பென்னாகரம் வட்டாட்சியா் பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேல், வட்டார மருத்துவ அலுவலா் ஜெயச்சந்திர பாபு, மருத்துவா்கள், அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.