காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்
காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பட்டதாரி இளைஞரை தீயணைப்புத் துறையினா் உதவியுடன் போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.


காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பட்டதாரி இளைஞரை தீயணைப்புத் துறையினா் உதவியுடன் போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே புதன்சந்தை பகுதியைச் சோ்ந்த ஜோசப் மகன் ஸ்டான்லி (25), எம்எஸ்சி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறாா். பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற தனது நண்பரின் திருமணத்துக்கு வெள்ளிக்கிழமை நண்பா்களுடன் வந்த அவா், நண்பா்களுடன் ஒகேனக்கல் அருவி பகுதியில் உள்ள சின்னாறு கோத்திக்கல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதுகுறித்து அவரது நண்பா்கள் அளித்த புகாரின் பேரில், ஒகேனக்கல் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று தீயணைப்புத் துறையினா் உதவியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...