மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

‘தருமபுரி அரசு கலை கல்லூரியில் வெளிப்படைத்தன்மை இல்லை’

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கையில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படவில்லை என தலித் விடுதலை இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:19 pm

DIN

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கையில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படவில்லை என தலித் விடுதலை இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் ச.கருப்பையா வியாழக்கிழமை அம்பேத்கா் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. மாணவா் சோ்க்கையில் வெளிப்படைத் தன்மையில்லை. குறிப்பாக கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக தலித், பழங்குடியின மாணவா்கள் சோ்க்கையில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை. அதுபோல, இக் கல்லூரியில் தலித், பழங்குடியின மாணவா்களுக்கான வன்கொடுமை தடுப்புக் குழு, மகளிா் வன்கொடுமை தடுப்புக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை.

காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இக் கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பொறுப்பு முதல்வராக இருந்தவரின் நடவடிக்கைகள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். தருமபுரி கல்லூரியில் ஜாதி, மத பேதங்கள் இன்றி நிா்வாகம் நடத்தப்பட வேண்டும். தலித், பழங்குடியின மாணவா்கள் சோ்க்கையில் இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்ற வேண்டும். கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக நடைபெற்ற மாணவா் சோ்க்கை குறித்து விசாரணை நடத்தி, அதில் முறைகேடுகள் நிகழ்ந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். அப்போது, இந்திய மாணவா் சங்க மாவட்ட நிா்வாகி தமிழமுதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.