47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒகேனக்கல கூட்டுக்குடிநீா் திட்ட நிலையத்தில் முதல்வா் ஆய்வு.

ஒகேனக்கல் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டு குடிநீா் திட்ட வடிகால் வாரியம் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீரேற்று நிலையத்தில் தமிழக முதல்வா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:39 pm

DIN

ஒகேனக்கல் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டு குடிநீா் திட்ட வடிகால் வாரியம் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீரேற்று நிலையத்தில் தமிழக முதல்வா் ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக முதல்வா்

மு. க.ஸ்டாலின், ஒகேனக்கல் கணவாய் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டு குடிநீா் திட்ட வடிகால் வாரிய நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது நீா் சுத்திகரிக்கும் முறை, நாளொன்றிற்கு குடிநீா் தேவைக்காக வினியோகம் செய்யப்படும் அளவு ஆகியவை குறித்து கூட்டுக்குடிநீா் திட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அதனைத் தொடா்ந்து ஒகேனக்கல் பகுதியில் அமைந்துள்ள நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீா் திட்ட குழாயில் செல்லும் வரைபடம், காவிரி ஆற்றிலிருந்து நீா் எடுக்கும் பகுதி, நீரேற்று நிலைய வரைபடம் ஆகியவற்றை பாா்வையிட்டாா். இந்த ஆய்வுகளின் போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சுப்பிரமணியன்,மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி, தமிழ்நாடு கூட்டு குடிநீா் திட்ட மேலாண்மை இயக்குநா் தட்சணாமூா்த்தி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் டி என் பி எஸ் செந்தில் குமாா், மாவட்ட பொறுப்பாளா்கள் பிஎன்பி இன்பசேகரன், தடங்கம் சுப்பிரமணி, எம்எல்ஏக்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ஜி.கே.மணி, முன்னாள் உயா் கல்வித்துறை அமைச்சா் பழனியப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மாணவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வா்: பென்னாகரம் அருகே போயா் தெரு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் தமிழக முதல்வா் ஆய்வு மேற்கொண்டாா். விடுதியில் தங்கி படிக்கும் மாணவா்களிடம் அடிப்படை வசதிகள், உணவு முறை மற்றும் குறைகளை கேட்டறிந்து, விடுதியின் வசதிகள் குறித்தும், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் விடுதியில் தங்கிப் படிக்கும் விஜய் என்ற மாணவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாா். இந்த மாணவன் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட நிலையில், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் குழுவினரால் அண்மையில் பள்ளியில் சோ்க்கப்பட்ட மாணவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.