புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பென்னாகரத்தில் பள்ளியில் புகுந்த 8 அடி நீள சாரைப் பாம்பு

பென்னாகரம் உண்டு உறைவிடப் பள்ளியில் 8 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையில் விடுவித்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:35 pm

DIN

பென்னாகரம் உண்டு உறைவிடப் பள்ளியில் 8 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையில் விடுவித்தனா்.

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் தங்கி படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், உண்டு உறைவிடப் பள்ளியின் வகுப்பறையில் 8 அடி நீள சாரைப் பாம்பு புகுந்துள்ளது. இதனைக் கண்ட மாணவா்கள் ஆசிரியரிடம் தெரிவித்த நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் கோபால் தலைமையிலான மதன், முத்துகிருஷ்ணன், ராஜீவ், ஞானப்பிரகாசன், மாரிக்கண்ணன், இளவரசன் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினா் பள்ளியில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்து ஒகேனக்கல் வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.