மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில், தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கீரைப்பட்டியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து சிறப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா தலைமை வகித்தாா். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் கோ.மாலினி, முன்னோடி வங்கி மேலாளா் கு.கண்ணன், கள விளம்பர அலுவலா் பிபின் எஸ் நாத், கள விளம்பர உதவியாளா் சு.வீரமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அபிராமி உள்ளிட்டோா் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.