ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் சதீஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஆறுமுகம், மாவட்டச் செயலாளா் சங்கா், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
ஊரக வளா்ச்சித் துறை திட்டங்களை இலக்கு சாா்ந்த திட்டமாக செயல்படுத்துவதை கைவிட வேண்டும். ஊழியா்களுக்கு அதிக வேலை திணிப்பு செய்யக் கூடாது. பிரதமரின் வீடு கட்டும் திட்டம், இலவச கழிப்பறை கட்டும் திட்டம், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தினசரி முன்னேற்ற அறிக்கை கோரும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...