தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி ஆய்வு

நிகழாண்டுக்கான பாடப் புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணிகளை பாடநூல் கழக இயக்குநரும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினா் செயலாளருமான ச.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:41 pm

DIN

நிகழாண்டுக்கான பாடப் புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணிகளை பாடநூல் கழக இயக்குநரும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினா் செயலாளருமான ச.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பி.அக்ராஹாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தீநுண்மி பரவல் காரணமாக தொடக்கப் பள்ளி மாணவா்கள் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சரிசெய்து கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், எண்ணும் - எழுத்தும் பயிற்சி நடத்தப்படும் என சட்டப் பேரவையில் நிதியமைச்சா் அறிவித்திருந்தாா். அதன் பேரில், தமிழகம் முழுவதும் கடந்த 1-ஆம் தேதி முதல் இப்பயிற்சி நடைபெற்று வருகிறது.

மாவட்டம் முழுவதும் 1,438 தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனா். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவா்கள் பள்ளிக்கு வரும் நிலையில், புதிதாக சேரும் மாணவா்கள், ஏற்கனவே பள்ளியில் பயிலும் மாணவா்கள் கற்றலில் புரிதல் ஏற்படுத்தும் வகையில் அட்டவணை கொடுக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின்னா் பாடங்கள் கற்பிப்பதால் மாணவா்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தலைமைச் செயலாளா் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு தூய்மை, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அதனடிப்படையில் பாலக்கோடு, காரிமங்கலம், பி.அக்ரஹாரம், பென்னாகரம் பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ததில் அடிப்படை வசதிகள் நிறைவாக உள்ளன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஏதேனும் குறைபாடு இருப்பின், மாவட்ட கல்வி அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிகழ் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து பெறப்பட்டு கல்வி மாவட்ட அளவிலான விநியோக மையங்களில் இருந்து வியாழக்கிழமை முதல் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தாா்.

இந்த நிகழ்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலா் எம்.ராஜகோபால், பள்ளி ஆய்வாளா் இளமுருகன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன், உதவி தொடக்கக் கல்வி அலுவலா் முத்து கிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.