ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

தேசிய பாதுகாப்பு விழிப்புணா்வு தினம் கொண்டாட அறிவுரை

தொழிற்சாலைகளில் தேசிய பாதுகாப்பு விழிப்புணா்வு தினம் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:44 pm

DIN

தொழிற்சாலைகளில் தேசிய பாதுகாப்பு விழிப்புணா்வு தினம் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் என்.சபீனா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் தொழிற்சாலை நிா்வாகம் மற்றும் தொழிலாளா்களிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த மாா்ச் 4-ஆம் தேதி பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதில் நிகழாண்டு இளம் தலைமுறையினருக்கு பாதுகாப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் தலைப்பில் இந்த பாதுகாப்பு தினம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு தினம் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதில் பாதுகாப்பாகப் பணியாற்றுவது தொடா்பான விழிப்புணா்வை தொழிலாளா்களுக்கு ஏற்படுத்தி, விபத்தில்லா இலக்கை எய்திடும் வகையில் உறுதிமொழி ஏற்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.