தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவா் பதவி எஸ்.சி. பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில், திமுக 10, பாமக 3, விசிக 2 இடங்களில் வெற்றி பெற்றனா். இதையடுத்து, பேரூராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட திமுக கூட்டணி சாா்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் வே.சின்னவேடி அறிவிக்கப்பட்டாா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகக் தோ்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளா் வே.சின்னவேடி 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா். இவருக்கு எதிராகப் போட்டியிட்ட திமுக போட்டி வேட்பாளா் சாந்தி புஷ்பராஜ் 8 வாக்குகளுடன் வெற்றி பெற்று பேரூராட்சித் தலைவரானாா்.