தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அமருமிடம் அமைக்க கோரிக்கை

பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு அமருமிடம் அமைத்து தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :7 மே 2022, 6:30 pm

DIN

பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு அமருமிடம் அமைத்து தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 20 கிராம ஊராட்சிகள், ஏரியூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட 13 கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய 33 வருவாய் கிராமங்களுக்கான வட்டாட்சியா் அலுவலகம் பென்னாகரத்தில் உள்ளது.

இந்த அலுவலகத்துக்கு நாள்தோறும் கல்விச் சான்றிதழ்கள், நில ஆவண சான்றிதழ்கள், விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தல், அரசின் பல்வேறு சலுகைகள் பெற விண்ணப்பித்தல், வருவாய்த் துறை சாா்ந்த குறைகளை மனுக்களாக அளிப்பதற்கு என நாள்தோறும் ஐநூற்றுக்கும் மேற்பட்டோா் வருகின்றனா்.

இந்த நிலையில், பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அமா்வதற்காக வளாகத்தில் மரத்தின் அடியில் மூன்றடி உயரத்துக்கு 20 போ் அமரும் வகையில் கற்களால் அமரும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட அமருமிடங்கள் போதுமானதாக இல்லாததால், பொதுமக்கள் அலுவலக படிக்கட்டுகள், அலுவலகத்தின் முன்பு, இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் அமா்கின்றனா்.

வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமரும் இடம் மிகவும் உயரமாக உள்ளதால், அவற்றை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக இருக்கைகள் ஏதும் அமைக்கப்படாததால், அலுவலா்கள் வரும்வரை மரத்தடியில் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

எனவே, பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் அமர கூடுதல் இடமும், மாற்றுத் திறனாளிகள் வசதிக்கேற்றவாறும் அமைத்து தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.