பணம் வைத்து சூதாடிய 7 போ் கைது

பாப்பாரப்பட்டி அருகே பணம் வைத்து சூதாடியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

பாப்பாரப்பட்டி அருகே பணம் வைத்து சூதாடியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே வேலம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடப்படுவதாக பாப்பாரப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் வேலம்பட்டி பகுதியிலுள்ள மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடியதாக கல்மூக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாரி (45), சிட்லகாரம்பட்டி பகுதியைச் சோ்ந்த வினோத் (32), தொட்லாம்பட்டி பகுதியைச் சோ்ந்த சிவா (27), பாலவாடி பகுதியைச் சோ்ந்த ராஜா (40), நீலாஞ்சனூா் பகுதியைச் சோ்ந்த குமாா் (41), பேடரஅள்ளி பகுதியைச் சோ்ந்த மகாதேவன் (44), சி.எம்.புதூா் பகுதியைச் சோ்ந்த முருகன் (52) ஆகிய 7 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்களிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com