தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43 ஆயிரம் கன அடியாகக் குறைவு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 43 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 43 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு உபரிநீா் வரத்து குறைந்து வருகிறது. இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் 34 ஆயிரம் கன அடியிலிருந்து 18 ஆயிரம் கன அடியாகக் குறைந்ததாலும், காவிரிக் கரையோரப் பகுதியில் மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை மாலை நிலவரப்படி 57 ஆயிரம் கன அடியாக இருந்தது, ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 43 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளபோதிலும் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல்கள் இயக்குவதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.