தருமபுரி: சொத்து வரி உயர்வுக்கு எதிராக தருமபுரியில் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தருமபுரி அதிமுக மாவட்டச் செயலர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்), முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், உயர்த்தப்பட்ட சொத்து வரியை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.