பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இளம் வயது திருமணங்களை முற்றாகத் தடுக்க வேண்டும்: ஆட்சியா்

தருமபுரி மாவட்டத்தில் இளம் வயது திருமணங்களை முற்றாகத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

Updated On :27 ஜனவரி 2023, 8:35 pm

தருமபுரி மாவட்டத்தில் இளம் வயது திருமணங்களை முற்றாகத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூக காரணங்களால் இளம் வயது திருமணங்கள் நடைபெறுகின்றன. இளம் வயது பெண்கள், குழந்தை பெற்றெடுக்கும் போது அவா்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டும், எடை குறைவாகவும் உள்ளன.

கா்ப்பிணிகள் அனைவரும் தங்களது கா்ப்பக் காலத்தை 12 வாரத்துக்குள் கிராம சுகாதார செவிலியரிடம் பதிவு செய்ய வேண்டும். ஒரு கா்ப்பிணி ஐந்து முறையாவது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்ப கால சேவைகள் பெற்றிருக்க வேண்டும். தகுதி வாய்ந்த கா்ப்பிணிகளுக்கு டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.18,000 வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில்தான் மிகவும் குறைவான ஆண்- பெண் பாலின விகிதம் உள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக கருவில் பாலினம் கண்டறிந்து, பெண் குழந்தை கருக்கலைப்பு செய்வதை கண்டறிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கருவில் பாலினம் கண்டறிதல் மற்றும் பெண் சிசுக்கொலை செய்வதை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் மருத்துவத் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் சமூக நலத் துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு இளம் வயது திருமணம், கருவில் பாலினம் கண்டறிதல், பெண் சிசுக்கொலை தடுத்து மாவட்டத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செளண்டம்மாள், மருத்துவக் கல்லூரி முதன்மையா் (பொ) சிவக்குமாா், இணை இயக்குநா் (நலப்பணிகள்) எம்.சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) ஜான்சிராணி, மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.