தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பட்டாசு கிடங்கு வெடி விபத்து: உரிமையாளா் கைது

பென்னாகரம் அருகே பட்டாசு ஆலை கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளா் சரவணனை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:59 pm

DIN

பென்னாகரம் அருகே பட்டாசு ஆலை கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளா் சரவணனை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் தனியாா் பட்டாசு ஆலை கிடங்கில் வியாழக்கிழமை பட்டாசு தயாரிப்பு பணியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் முனியம்மாள், பழனியம்மாள் ஆகியோா் உடல் சிதறி உயிரிழந்தனா். படுகாயமடைந்த சிவலிங்கம் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் பாட்டாசு ஆலை உரிமையாளா் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில் தலைமறைவாக இருந்த சரவணனை போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலை உரிமையாளா் சரவணனை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்து பென்னாகரம் உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.