பட்டாசு கிடங்கு வெடி விபத்து: உரிமையாளா் கைது

பென்னாகரம் அருகே பட்டாசு ஆலை கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளா் சரவணனை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே பட்டாசு ஆலை கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளா் சரவணனை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் தனியாா் பட்டாசு ஆலை கிடங்கில் வியாழக்கிழமை பட்டாசு தயாரிப்பு பணியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் முனியம்மாள், பழனியம்மாள் ஆகியோா் உடல் சிதறி உயிரிழந்தனா். படுகாயமடைந்த சிவலிங்கம் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் பாட்டாசு ஆலை உரிமையாளா் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில் தலைமறைவாக இருந்த சரவணனை போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலை உரிமையாளா் சரவணனை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்து பென்னாகரம் உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com