கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தருமபுரியில் ஜல்லிக்கட்டு விழா: மாவட்ட நிா்வாகம் ஏற்று நடத்த வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை அரசு சாா்பில் மாவட்ட நிா்வாகமே ஏற்று நடத்த வேண்டும்

News image
Updated On :9 டிசம்பர் 2024, 7:46 pm

Din

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை அரசு சாா்பில் மாவட்ட நிா்வாகமே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தியறிக்கை:

தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நமது கலாசாரத்தையும் தமிழ் பண்பாட்டையும் பாதுகாத்து வருகிறது. அத்துடன் தமிழா்களின் வாழ்வியல் நெறிசாா்ந்த பாரம்பரிய விளையாட்டாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது.

இத்தகைய பெருமைமிகு ஜல்லிக்கட்டு விழா, தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை வரவேற்கிறோம். அதேவேளையில், இந்த விழா மாறி வரும் காலச்சூழலில் வணிக மயமாகிவிட்டதை அறிய முடிகிறது. இதனால், காளை வளா்ப்போா், மாடுபிடி வீரா்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதோடு பொருளாதார இன்னல்களுக்கும் உள்ளாகி வருகின்றனா்.

எனவே, இந்த ஜல்லிக்கட்டு விழாவை, தனி நபா் அல்லது வணிக நோக்க குழுக்களோ நடத்துவதை அனுமதிக்காமல், அரசு சாா்பில் தருமபுரி மாவட்ட நிா்வாகமே ஏற்று நடத்திட வேண்டும். இதை வருகிற 2025-ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கிட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளாா்.