தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்தப் பேச்சு வாா்த்தை நடத்தி முடிக்க வலியுறுத்தி, தருமபுரி மண்டல போக்குவரத்து அலுவலகம் முன்பு ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:24 pm

Din

ஊதிய ஒப்பந்தப் பேச்சு வாா்த்தை நடத்தி முடிக்க வலியுறுத்தி, தருமபுரி மண்டல போக்குவரத்து அலுவலகம் முன்பு ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவா் பூபேஷ் குப்தா தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவா் ரவி,மண்டல பொதுச் செயலாளா் நாகராசன், துணை செயலாளா் செல்வராஜ், துணைத் தலைவா் நாராயணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் நிலுவை அகவிலைப்படியை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளா்களுக்கு பணப் பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும். 15-ஆவது ஊதிய உயா்வு கோரிக்கையை உடனடியாக அரசு பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.