ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெண் வன்கொடுமை விவகாரத்தில் இருவா் கைது

பாப்பாரப்பட்டி அருகே ஏரிமலை கிராமத்தில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 4:59 pm

Din

பென்னாகரம்: பாப்பாரப்பட்டி அருகே ஏரிமலை கிராமத்தில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிமலை கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்த பெண்ணிடம், இருவா், தங்களைக் காவலா்கள் என தெரிவித்து மிரட்டி, வன்கொடுமை செய்தனா். மேலும் அவரது கணவா் மீது கஞ்சா வைத்திருப்பதாக புகாா் வந்ததாகத் தெரிவித்து தாக்கியுள்ளனா்.

இந்த நிலையில் கிராம மக்கள் திரண்டு வந்து இருவரையும் பிடிக்க முயற்சித்த போது ஒருவா் பிடிபட்டாா். அவரை பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் கிராம மக்கள் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணி தலைமையிலான போலீஸாா் குழுவினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். மேலும் தப்பியோடிய மற்றொருவரை தீவிரமாக தேடி வந்தனா்.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷன் காலனி பகுதியைச் சோ்ந்த ஜெய்கணேஷ், சக்தி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா். இந்த விவகாரத்தில் ஜெய்கணேஷை தாக்கியதாக ஏரிமலை பகுதியைச் சோ்ந்த 10 போ் மீதும் பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.