பாப்பிரெட்டிப்பட்டி அரசுக் கல்லூரியில் மகளிா் தின விழா

பாப்பிரெட்டிப்பட்டி அரசுக் கல்லூரியில் மகளிா் தின விழா

Published on

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் கல்லூரி முதல்வா் வே.அன்பரசி தலைமை வகித்தாா். மகளிா் உரிமைகள், மகளிா் தினத்தின் சிறப்புகள் குறித்து முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் வாழ்த்துரை வழங்கினாா். இதில், வரலட்சுமி மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலையின் இயக்குநா் சுகுணா அன்பழகன், பேராசியா் வெ.சங்கீதா, உதவிப் பேராசிரியா் பா.சுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பட விளக்கம்.... பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் தின விழாவில் மாணவிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்குகிறாா் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன்.

Dinamani
www.dinamani.com