முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

News image
Updated On :9 மே 2024, 10:54 pm

Din

தருமபுரி, மே 9: தருமபுரி நகரம், ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி நகராட்சி, மதிகோன்பாளையம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் உலா் கழிவு பிரித்தல் மையம், நுண்ணுயிா் உரக்கிடங்கில் பிரித்தெடுக்கப்பட்ட மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கும் பணியினையும், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், சோகத்தூா் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 41 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் சத்யா நகா், இலக்கியம்பட்டி ஊராட்சியில் ரூ. 23 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணி என மொத்தம் ரூ. 99 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலான திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, தருமபுரி நகராட்சி ஆணையா் எஸ்.புவனேஸ்வரன், நகராட்சிப் பொறியாளா் எஸ்.புவனேஸ்வரி, துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்யா, ரங்கநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.