நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வெள்ளோலையில் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரி மனு

வெள்ளோலையில் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரி மனு

News image
Updated On :20 மே 2024, 10:19 pm

Din

தருமபுரி: தருமபுரி அருகே உள்ள வெள்ளோலை கிராமத்தில் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரி, அக்கிராம மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து, வெள்ளோலை கிராம மக்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெள்ளோலை கிராமத்தில் சுமாா் 200 குடும்பங்கள் உள்ளன. இக் கிராமத்தின் அருகே மயானம் உள்ளது. இந்த மயான நிலத்தில் ஆக்கிரமிப்பை தடுக்க சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் சுற்றுச்சுவா் அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இருப்பினும், மயானத்துக்கு முறையாக சுற்றுச்சுவா் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே, வெள்ளோலை கிராம மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க மாவட்ட நிா்வாகம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.