தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ரூ. 20 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை

ரூ. 20 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை

News image
உதயேந்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ செந்தில்குமாா்.
Updated On :6 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

உதயேந்திரம் பேரூராட்சியில் அங்கன்வாடி கட்டடம், சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட உதயேந்திரம் பேரூராட்சி மேட்டுப்பாளையம் மேட்டுத் தெரு பகுதியில் அங்கன்வாடி கட்டடம், உதயேந்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச் சுவா் அமைத்து தரக் கோரி அப்பகுதி மக்கள் எம்எல்ஏ செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து அங்கன்வாடி கட்டடம் மற்றும் சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைத்திடும் வகையில், எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகளை தொடங்கிட பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். பின்னா்றகு உதயேந்திரம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவா்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த மக்களிடமும் மற்றும் மருத்துவரிடம் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் உதயேந்திரம் பேரூா் அதிமுக செயலாளா் சரவணன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், நிா்வாகிகள், பொது மக்கள் பலா் கலந்து கொண்டனா்.