புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மிட்டாரெட்டி அள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

இணைப்புச் சாலை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்...

News image

மிட்டாரெட்டி அள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலை அமைக்கக் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி.

Updated On :20 நவம்பர் 2024, 8:15 pm

Din

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட மிட்டா ரெட்டி அள்ளி முதல் காளிக்கரம்பு வழியாக பொம்மிடிக்கு இணைப்புச் சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மாரிமுத்து தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா், முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். மாவட்டச் செயலாளா் அ.குமாா், மாநிலக்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.முத்து, தி.வ.தனுசன், எஸ்.கிரைஸாமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட மிட்டாரெட்டி அள்ளியில் மலைப்பகுதியில் அமைந்துள்ள கோம்பேரி முதல் காளிக்கரம்பு வரையில் புதிதாக சாலை அமைத்து பொம்மிடிக்கு இணைப்புச் சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும். மருத்துவத் துறை, வருவாய்த் துறை, கல்வித் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.