சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக புதன்கிழமை தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 6:34 pm

Din

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக புதன்கிழமை தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளா் பெயா் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளா் பதவி உயா்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை களைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடா்பாக தெளிவுரைகளை வருவாய் நிா்வாக ஆணையா் உடனே வெளியிட வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

தருமபுரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்டத் தலைவா் ரஞ்சித் குமாா், காரிமங்கலத்தில் வட்டத் தலைவா் ராஜ்குமாா், பாலக்கோட்டில் வட்டத் தலைவா் செந்தில் ஆகியோா் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.