நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்க வலியுறுத்தல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் முழுமையாக அனைத்து நாள்களிலும் பணி வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:07 am

Din

மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் முழுமையாக அனைத்து நாள்களிலும் பணி வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் தருமபுரி அருகே நல்லம்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் குறித்த கருத்துரை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலக் குழு உறுப்பினா் ஜி.மாதையன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் கருத்துரை வழங்கினாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, ஒன்றியச் செயலாளா் ஜி.பச்சாகவுண்டா், மாநிலக் குழு உறுப்பினா் அலமேலு எத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய துணைச் செயலாளா் வெ.பை மாதையன் நன்றி கூறினாா். கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை அட்டை பெற்ற 2 லட்சத்து 72 ஆயிரம் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு நூறு நாள்கள் வேலை என்பதை உறுத்திப்படுத்த வேண்டும்.

கட்டுமான பணிகளுக்கு ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நிதி ஒதுக்கக் கூடாது. இத் திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.