கூட்டத்துக்கு மாநிலக் குழு உறுப்பினா் ஜி.மாதையன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் கருத்துரை வழங்கினாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, ஒன்றியச் செயலாளா் ஜி.பச்சாகவுண்டா், மாநிலக் குழு உறுப்பினா் அலமேலு எத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய துணைச் செயலாளா் வெ.பை மாதையன் நன்றி கூறினாா். கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை அட்டை பெற்ற 2 லட்சத்து 72 ஆயிரம் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு நூறு நாள்கள் வேலை என்பதை உறுத்திப்படுத்த வேண்டும்.