நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காலை உணவுத் திட்டம்: அமைச்சா் ஆய்வு

பென்னாகரம், குள்ளனூா் அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:53 pm

Din

பென்னாகரம், குள்ளனூா் அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பள்ளிகளை ஆய்வு செய்து வரும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை காலை பென்னாகரம், குள்ளனூா் பள்ளிக்கு சென்றாா். அங்கு, காலையில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு, அவற்றை தயாா் செய்யும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

காலை உணவு தாமதமாக வழங்கக் கூடாது. அரசு அறிவுறுத்தியபடி உணவின் வகைகள் இருக்க வேண்டும் என பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து மாணவா்களிடம் கலந்துரையாடி அவா்களது கற்றல் திறனை மதிப்பீடு செய்தாா். பள்ளியில் குடிநீா், கழிப்பறை வசதிகளை ஆய்வு செய்தாா்.