நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வனத் துறையினரைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரத்தில் வேளாண் நிலத்தில் முள்செடி நடவு செய்யும் பென்னாகரம் வனத் துறையினரைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:52 pm

Din

பென்னாகரத்தில் வேளாண் நிலத்தில் முள்செடி நடவு செய்யும் பென்னாகரம் வனத் துறையினரைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் வனத் துறை அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளா் எம்.தங்கராசு தலைமை வகித்தாா். ஊா் கவுண்டா் அசோகன் முன்னிலை வகித்தாா். மாநில குழு உறுப்பினா்

இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.மாதன், விவசாய சங்க மாவட்ட தலைவா் எம்.குமாா், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் என்.பி.முருகன், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளா்

ஆ.ஜீவானந்தம் ஆகியோா் பேசினா்.

ஏரியூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏமனூா் தொன்னக்குட்ட அள்ளி கிராமங்களில் வேளாண்மை சாகுபடி நிலத்தில் பென்னாகரம் வனத் துறையினா் முள் செடி நடுவதை நிறுத்த வேண்டும். மேட்டூா் அணை

நீா்த் தேக்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் மேற்கொள்ளும் விவசாயப் பணிகளை வனத் துறை, வருவாய்த் துறையினா் தடுத்து நிறுத்தக் கூடாது.

ஏமனூா் தொன்னகுட்ட அள்ளி பகுதிகளில் உள்ள 464 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை பதிவேட்டில் வருவாய்த் துறையினா் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொன்ன குட்ட அள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி தங்கராசு, ஒன்றியக் குழு உறுப்பினா் மாதம்மாள் மாணிக்கம், கோடி அள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் கமலா குமாா் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.