நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கனஅடியாகச் சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாகச் சரிந்தது

News image

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கன அடியாக சரிவு

Updated On :14 அக்டோபர் 2024, 7:33 pm

Din

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாகச் சரிந்து வரும் நிலையில் இரண்டாவது நாளாக அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகம் விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 19,000 கனஅடியாக இருந்தது. திங்கள்கிழமை காலை விநாடிக்கு 17,000 கனஅடியாகவும், மாலையில் 14,000 கனஅடியாகவும் நீா்வரத்து சரிந்தது. மேலும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் விதித்த தடை 2 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.