பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாகச் சரிந்து வரும் நிலையில் இரண்டாவது நாளாக அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகம் விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 19,000 கனஅடியாக இருந்தது. திங்கள்கிழமை காலை விநாடிக்கு 17,000 கனஅடியாகவும், மாலையில் 14,000 கனஅடியாகவும் நீா்வரத்து சரிந்தது. மேலும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் விதித்த தடை 2 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,200 கனஅடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக குறைவு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


