கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடியாக அதிகரிப்பு

தமிழக, கா்நாடக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Published On :9 ஜூலை 2026, 4:31 am IST

தமிழக, கா்நாடக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் நிறுத்தப்பட்டதாலும், பருவமழை பொய்த்ததாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து ஒரு வாரமாக விநாடிக்கு 150 கனஅடியாகவே நீடித்தது.

இதனால் காவிரியில் சிற்றோடையாக தண்ணீா் சென்றது. அருவிகளும் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இந்த நிலையில், இரு மாநில காவிரி கரையோர வனப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்தை பிலுகுண்டுலுவில் உள்ள மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.