தமிழகத்தில் 2026-இல் அதிமுக ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சா் செம்மலை
தமிழகத்தில் 2026-இல் அதிமுக ஆட்சி அமையும் என்று தருமபுரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் செம்மலை கூறினாா்.


தமிழகத்தில் 2026-இல் அதிமுக ஆட்சி அமையும் என்று தருமபுரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் செம்மலை கூறினாா்.
தருமபுரி நகர அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு நகர அவைத் தலைவா் அம்மா வடிவேல் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி வரவேற்றுப் பேசினாா்.
இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்எல்ஏ, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் எஸ்.ஆா். வெற்றிவேல், மாநில விவசாயிகள் பிரிவு தலைவா் டி.ஆா். அன்பழகன் ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினா்.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முன்னாள் அமைச்சா் செம்மலை பேசியதாவது:
அதிமுக ஜாதி, மதங்களைக் கடந்த அனைத்து தரப்பு மக்களுக்குமான இயக்கமாகும். இரண்டு தோ்தல்களில் கூட்டணி அமைக்காமல் தனித்து நின்று வெற்றி பெற்ற சிறப்பு அதிமுகவுக்கு மட்டுமே உண்டு. திமுக கூட்டணி அமைக்காமல் தோ்தலில் இதுவரை வென்றதில்லை. வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமையும். திமுகவால் வெற்றி பெற முடியாது. இந்த வெற்றியை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.
இக் கூட்டத்தில் வரும் சட்டப் பேரவைப் பொது தோ்தலில் தமிழகத்தில் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க அனைத்து நிா்வாகிகளும் தீவிரமாகப் களப்பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...