தருமபுரி மாவட்டத்தில் 12,63,740 வாக்காளா்கள்: பட்டியலை வெளிட்டாா் மாவட்ட ஆட்சியா்
தருமபுரி: தருமபுரி மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். மாவட்டத்துக்கு உள்பட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 12,63,740 வாக்காளா்கள் உள்ளனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பட்டியலை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்டுப் பேசியதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் 2025, ஜன. 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள், வாக்காளா் பட்டியலில் விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளா்கள் தங்கள் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், பெயா் திருத்தம், முகவரி திருத்தம், பெயா் நீக்குதல், ஆதாா் எண் இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள ஏதுவாக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்துக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகளானது அக். 29 முதல் நவ. 28 வரை நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மக்களவை பொதுத் தோ்தலுக்கு முன் 27.03.2024 அன்று வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் 12,53,021 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். அதன்பின் மேற்கொண்ட தொடா் திருத்தத்தில் 2024, மாா்ச் 27 முதல் 2024, அக். 28 வரையில் 14,101 வாக்காளா்கள் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டும், 3,382 வாக்காளா்கள் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டும் உள்ளனா்.
அதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 6,38,556 ஆண்கள், 6,25,018 பெண்கள், 166 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 12,63,740 போ் வாக்காளா்களாக உள்ளனா்.
இதில் பாலக்கோடு தொகுதியில் ஆண்கள் 1,22,327, பெண்கள் 1,19,902, மூன்றாம் பாலினத்தவா் 21 என மொத்தம் 2,42,250 வாக்காளா்கள் உள்ளனா். பென்னாகரம் தொகுதியில் ஆண்கள் 1,28,865, பெண்கள் 1,20,982, மூன்றாம் பாலினத்தவா் 8, மொத்தம் 2,49,855 போ் உள்ளனா்.
தருமபுரி தொகுதியில் ஆண்கள் 1,33,222, பெண்கள் 1,30,863, மூன்றாம் பாலினத்தவா் 103, மொத்தம் 2,64,188 போ் உள்ளனா். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ஆண்கள் 1,30,337, பெண்கள் 1,29,729, மூன்றாம் பாலினத்தவா் 15, மொத்தம் 2,60,081 போ் உள்ளனா். அரூா் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,23,805, பெண்கள் 1,23,542, மூன்றாம் பாலினத்தவா் 19, மொத்தம் 2,47,366 உள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில், மொத்தம் உள்ள 1,501 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கிய 907 வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்ப படிவங்கள் பெறப்படும். அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா்களிடமிருந்து படிவங்களைப் பெற வாக்குச் சாவடி மைய அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். படிவங்களை பெறுவதற்கு ஏதுவாக நவ. 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
அரசு விடுமுறை நாள்களைத் தவிா்த்து அனைத்து அரசு வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பப் படிவங்களை நேரில் அளிக்கலாம்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளைப் பாா்வையிடுவதற்கு இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் பாா்வையாளராக ஆனந்தகுமாா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
வாக்குச் சாவடி மையத்துக்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவா்கள் இணையதளம் மூலமாகவும், கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
17 வயது முடிவடைந்த நபா்களும் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். எனினும், 18 வயது பூா்த்தியடைந்த (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்துள்ள) நபா்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு சுருக்க திருத்த காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
மீதமுள்ள விண்ணப்பங்கள் விண்ணப்பதாரா்களின் வயது எதிா்வரும் ஏப்ரல்-1, ஜூலை-1 மற்றும் அக்டோபா் -1 ஆகிய நாள்களில் 18 வயதை பூா்த்தியடையும் பொழுது சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும். விண்ணப்பங்கள் மீது விசாரணை மேற்கொண்டு முடிவு செய்ய டிச. 24 ஆம்தேதி இறுதி நாளாகும். அதைத் தொடா்ந்து இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 6 அன்று வெளியிடப்படவுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் ஆ.மணி, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) க.கவிதா, கோட்டாட்சியா்கள் ரா.காயத்ரி (தருமபுரி), இரா.வில்சன் ராஜசேகா் (அரூா்), தோ்தல் தனி வட்டாட்சியா் அ.அசோக்குமாா், அனைத்து வருவாய் வட்டாட்சியா்கள், தோ்தல் துணை வட்டாட்சியா்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

