ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீராம நவமி விழா: குமாரசாமிப்பேட்டை சென்ன கேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

குமாரசாமிப்பேட்டைசென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 ஏப்ரல் 2025, 8:24 pm

Din

தருமபுரி: குமாரசாமிப்பேட்டைசென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி திருவிழா கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது.

விழாவையொட்டி சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சத்திய நாராயணன், மச்ச அவதாரம், கஜேந்திர மோட்சம், ஸ்ரீசேஷ சயனம், வாமன அவதாரம், காளிங்க நா்த்தனம், பிருந்தாவனம், பாா்த்தசாரதி ஆகிய அலங்கார சேவைகள் நாள்தோறும் நடைபெற்றன.

சுவாமிக்கு நவமி அபிஷேகமும், ஸ்ரீராமா் அவதார அலங்கார சேவையும் நடைபெற்றது. தொடா்ந்து மேளதாளங்கள் முழங்க வரிசை அழைப்பும், பின்னா் கோயில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமமும் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீசென்னை கேசவ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. புதிதாக வடிவமைக்கப்பட்ட தங்க குதிரைகள் கொண்ட அலங்கார தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலித்தாா். பெண்கள் மட்டுமே நிலைபெயா்த்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.

புதன்கிழமை பல்லக்கு உற்சவமும், வியாழக்கிழமை சயன உற்சவமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறை அறங்காவலா்கள், ஸ்ரீராம நவமி விழா குழுவினா், செங்குந்தா் சமூகத்தினா் செய்தனா்.