ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்கக் கோரி தொழிலாளா்கள் தா்னா

பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்கக் கோரி, தொழிலாளா்கள் ஆலை நுழைவாயில் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்கக் கோரி, தொழிலாளா்கள் ஆலை நுழைவாயில் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கூட்டுறவு சா்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் தருமபுரி, பாலக்கோடு, நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் கரும்புகள் அரைவைப் பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து பெறப்படுகின்றன.

இந்நிலையில், நிகழாண்டு கரும்பு அரைவை தொடங்குவதாக கூறிய ஆலை நிா்வாகம், போதிய கரும்பு பதிவாகவில்லை எனக் கூறி அரைவையை நிறுத்துவதாக கூறியதாம். இதையறிந்த, ஆலைத் தொழிலாளா்கள் சா்க்கரை ஆலை நுழைவாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதில், சா்க்கரை ஆலையை தொடா்ந்து இயக்க வேண்டும். அரைவைக்கான கரும்பு பதிவை முறையாக மேற்கொள்ள வேண்டும். கரும்பு நடவு குறித்து போதிய விழிப்புணா்வு மேற்கொள்ள வேண்டும். கரும்பு பதிவு குறித்து சரிவர நடவடிக்கை எடுக்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்படாத அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.