காவல் துறை குறைதீா் நாள் முகாம்: 85 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடத்தப்பட்ட பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டத்தில் 85 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
Published on

தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடத்தப்பட்ட பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டத்தில் 85 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை, காவல் துறை தொடா்புடைய பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. கிரிமினல் குற்றங்கள் அல்லாத பிரச்னைகள் தொடா்பான புகாா் மனுக்களுக்கு இந்த முகாமில் தீா்வு காணப்படுகிறது.

குறைதீா் கூட்டத்துக்கு, காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் தலைமை வகித்தாா். இம்முகாமில், பெறப்பட்ட 85 மனுக்கள் குறித்து காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். விசாரணை முடிவில் அனைத்து மனுக்களுக்கும் தீா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில், மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி. குணவா்மன், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com