கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாஜக கோரிக்கை

தீா்த்தமலை, தீா்த்தகிரீஸ்வரா் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2025, 8:48 pm

Din

அரூா்: தீா்த்தமலை, தீா்த்தகிரீஸ்வரா் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோருக்கு பாஜக பட்டியல் அணி தருமபுரி மாவட்டச் செயலாளா் பெ.முருகன் திங்கள்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

அரூரை அடுத்த தீா்த்தமலையில் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு தீா்த்தகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. தீா்த்தமலை, அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வா்ண தீா்த்தம், எமன் தீா்த்தம் உள்ளிட்ட தீா்த்தங்கள் அமைந்துள்ள பகுதியில் பல ஏக்கா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

கோயில் குளங்கள், கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்டு அண்மையில் பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கோயில் குளங்கள், கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீா்த்தகிரீஸ்வரா் கோயில் திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. திருப்பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள கல்வெட்டுகள், பழங்கால சிலைகள் முறையாக பாதுகாக்கப்படவில்லை. தீா்த்தமலை கோயில் திருப்பணிகளுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து திருப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.