காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மக்கள் குறைகேட்பு கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரெ.சதீஷ் வழங்கினாா்.

News image
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ரெ.சதீஷ்.
Updated On :9 ஜூன் 2025, 10:30 pm

Din

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரெ.சதீஷ் வழங்கினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகைகள், அரசு நலத்திட்ட உதவிகள் வேண்டி பொதுமக்களிடமிருந்து மொத்தம் 456 மனுக்கள் வரப்பெற்றன.

இக்கூட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் நவீன செயற்கை அவயங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 14,58,000 மதிப்பிலான செயற்கை அவயங்களை ஆட்சியா் ரெ.சதீஷ் வழங்கி பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியா் சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலா் செம்மலை, பழங்குடியினா் நலத்துறை அலுவலா் கண்ணன், மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொ.செண்பகவள்ளி, மாவட்ட திட்ட அலுவலா் (மருத்துவ காப்பீட்டுத் திட்டம்) ராஜேஷ் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.