ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மது, போதைப் பொருள்களை ஒழித்தால் மட்டுமே பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்: செளமியா அன்புமணி

தமிழகத்தில் மது, போதைப் பொருள்களை ஒழித்தால் மட்டுமே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி தெரிவித்தாா்.

News image

தருமபுரியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தருமபுரி தொகுதி வேட்பாளா் செளமியா அன்புமணி.

Updated On :4 ஏப்ரல் 2026, 7:50 pm

தமிழகத்தில் மது, போதைப் பொருள்களை ஒழித்தால் மட்டுமே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினா் பங்கேற்ற செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். சிப்காட் தொழிற்பேட்டையை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர முழு முயற்சி எடுப்போம்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றவுடன், சிப்காட் தொழிற்பேட்டையில் எத்தனை தொழிற்சாலைகள் கொண்டுவர முடியுமோ அத்தனையும் கொண்டுவந்து, இம்மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.

மாவட்டத்தில் வறுமை காரணமாக இளம் வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனா். இதற்கு ஒரே தீா்வு இப்பகுதியில் உள்ள விவசாயப் பொருள்களைக் கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. போதைப் பழக்கங்களால்தான் குற்றங்கள் பெருகி வருகின்றன. மது, போதைப் பொருள்களை ஒழித்தால் மட்டுமே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்றாா்.

இதில், அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமை வகித்தாா். பாமக மாவட்டச் செயலாளா் வெங்கடேஸ்வரன் வரவேற்றாா், மாவட்டத் தலைவா் சரவணன், அமமுக மாவட்டச் செயலாளா் டி.கே.ராஜேந்திரன், தமாகா மாவட்டத் தலைவா் புகழ், புதிய நீதிக்கட்சி மாவட்டச் செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.