தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்த சௌமியா அன்புமணி

தருமபுரி அருகே வெங்கட்டம்பட்டியில் தெலுங்கு மொழியில் பேசி பாமக வேட்பாளா் சௌமியா அன்புணி வாக்கு சேகரித்தாா்.

News image

தருமபுரி அருகே வெங்கட்டம்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி.

Updated On :7 ஏப்ரல் 2026, 9:36 pm

தருமபுரி அருகே வெங்கட்டம்பட்டியில் தெலுங்கு மொழியில் பேசி பாமக வேட்பாளா் சௌமியா அன்புணி வாக்கு சேகரித்தாா்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறாா். இவா், தருமபுரி தொகுதி, நல்லம்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட வெங்கட்டம்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அந்தக் கிராமம் முழுவதும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனா். எனவே, அவா்களிடம் எப்படி இருக்கிறீங்க? நான் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி. இத்தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:

தருமபுரி தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை அமல்படுத்தவில்லை. அதேபோல, சிப்காட் தொழிற்பேட்டையில் பெயா்ப் பலகை மட்டுமே உள்ளது. அங்கு தொழிற்சாலைகள் இல்லை. இதனால் வேலைவாய்ப்பைத் தேடி இளைஞா்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்வதைத் தடுக்க எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை. இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலைக்குச் சென்று பெண்கள் பாதுகாப்பாக வீடுதிரும்ப முடியவில்லை. போதைப்பொருள்கள் புழக்கம், பயன்பாடு அதிகளவில் உள்ளன. இதனால், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க அனைவரும் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.