பாலக்கோடு தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றாததற்கு திமுக அரசின் மெத்தனப் போக்குதான் காரணம் என அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
பாலக்கோடு தொகுதிக்கு உள்பட்ட முக்குளம், பொம்மஅள்ளி, தும்பலஅள்ளி, புலிக்கல், கேத்தனஅள்ளி, எலுமிச்சனஅள்ளி, அனுமந்தபுரம், பல்லேனஅள்ளி, எர்ரசீகலஅள்ளி, அண்ணாமலை அள்ளி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் வாக்கு சேகரித்து பேசியதாவது:
பாலக்கோடு தொகுதியில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் அரசாணை பிறப்பித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பயணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு அத்திட்டங்கள் மீது அக்கரை செலுத்தாமல், நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடிக்காமல் மெத்தனமாக இருந்ததே அத்திட்டங்கள் நிறைவேற்றாததற்கு காரணம். ஐந்த ஆண்டுகளில் சுமாா் 25
சதவீத பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பொதுமக்கள் நிலுவையிலுள்ள திட்டங்கள் நிறைவேற அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். இந்த பிரசாரத்தின்போது அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திமுக அரசு எண்ணற்ற மகளிா் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது

மகளிா் வாழ்க்கைத் தரம் உயரும் திட்டங்களை செயல்படுத்தியது திமுக: பவானி தொகுதி வேட்பாளா்

கீழ்பென்னாத்தூா் தொகுதி வளா்ச்சிக்காக அடிப்படைத் திட்டங்கள்: திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி உறுதி

ராதாபுரத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் பாஜக வேட்பாளா் உறுதி: எஸ்.பி. பாலகிருஷ்ணன்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


