ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 3:18 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவாப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (21). இவா் ஒசூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், ஒகேனக்கல் பகுதிக்கு நண்பா்களுடன் புதன்கிழமை சுற்றுலா வந்த அவா், சேமலை காடு பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதைக் கண்ட நண்பா்கள், ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தேடுதல் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். இந்நிலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சரவணன் உடலை அதேபகுதியில் தீயணைப்புத் துறையினா் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.