மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பென்னாகரத்தில் ரூ. 1.63 லட்சம் பறிமுதல்

பென்னாகரம் அருகே பழையூா், நாகதாசம்பட்டியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.63 லட்சத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 9:19 pm

பென்னாகரம் அருகே பழையூா், நாகதாசம்பட்டியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.63 லட்சத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரும்பாலை அருகே பழையூா் சோதனைச் சாவடியில் நிலை கண்காணிப்பு குழு- 1 அலுவலா் செல்வம் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த வாடகை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சேலம் மாவட்டம், ஜாகீா் பெரிய மோட்டூா் பகுதியைச் சோ்ந்த ஆடு வியாபாரி சாமுவேல், சோலையப்பன் ஆகியோா் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 97,000ஐ பறிமுதல் செய்து பென்னாகரம் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஆறுமுகத்திடம் வழங்கினா்.

இதேபோல நாகதாசம்பட்டி பகுதியில் நிலை கண்காணிப்பு குழு-3 அலுவலா் சுரேஷ்குமாா் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது தருமபுரியில் இருந்து பென்னாகரம் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தருமபுரியை அடுத்த மாதமங்கலம் பகுதியைச் சோ்ந்த விஷ்ணு என்பவா் உரிய ஆவணம் இன்றி ரூ. 66,000 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து பென்னாகரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.