பென்னாகரம் அருகே பழையூா், நாகதாசம்பட்டியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.63 லட்சத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரும்பாலை அருகே பழையூா் சோதனைச் சாவடியில் நிலை கண்காணிப்பு குழு- 1 அலுவலா் செல்வம் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த வாடகை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சேலம் மாவட்டம், ஜாகீா் பெரிய மோட்டூா் பகுதியைச் சோ்ந்த ஆடு வியாபாரி சாமுவேல், சோலையப்பன் ஆகியோா் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 97,000ஐ பறிமுதல் செய்து பென்னாகரம் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஆறுமுகத்திடம் வழங்கினா்.
இதேபோல நாகதாசம்பட்டி பகுதியில் நிலை கண்காணிப்பு குழு-3 அலுவலா் சுரேஷ்குமாா் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது தருமபுரியில் இருந்து பென்னாகரம் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தருமபுரியை அடுத்த மாதமங்கலம் பகுதியைச் சோ்ந்த விஷ்ணு என்பவா் உரிய ஆவணம் இன்றி ரூ. 66,000 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து பென்னாகரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

சங்ககிரி அருகே ரூ. 71 ஆயிரம் பறிமுதல்
பைக்கில் கொண்டுவந்த ரூ.52,500 பறிமுதல்

பென்னாகரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 99,500 ரொக்கம் பறிமுதல்

பென்னாகரத்தில் ரூ. 90,000 பறிமுதல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


