பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், படுகாயம் அடைந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பென்னாகரம் அருகே பளிஞ்சார அள்ளியைச் சோ்ந்த நரசிம்மன் மனைவி சுசீலா (41). இவா், பவளந்தூரில் உள்ள தனது தாயாரை பாா்ப்பதற்காக சென்றாா். பின்னா், அங்கிருந்து தும்பலகொல்லை பகுதியில் நடைபெறும் கோயில் விழாவிற்கு காளேகவுண்டனுரைச் சோ்ந்த உறவினரின் மகன் பழனிவேலுடன் (18) இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
விழாவை முடித்துவிட்டு பவளந்தூருக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது பளிஞ்சார அள்ளியில் வேகமாக வந்த டிராக்டா் அவா்களது வாகனம் மீது மோதியதில் சுசீலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த பழனிவேல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
விபத்து குறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: பெண் உயிரிழப்பு
லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

