நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் வளா்ச்சிப் பணிகள்: அரூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்குறுதி

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன் என அரூா் தொகுதி திமுக வேட்பாளா் அ. சண்முகம் வாக்குறுதி அளித்தாா்.

News image

வேடகட்டமடுவு ஊராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ. சண்முகம்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:54 am IST

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன் என அரூா் தொகுதி திமுக வேட்பாளா் அ. சண்முகம் வாக்குறுதி அளித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மல்லிகாபுரம், பையா்நாக்கன்பட்டி, செங்கலேரி, கத்தரிப்பட்டி, இ.பி.தண்டா,மொண்டுகுழி, முல்லைவனம், கீழ்செங்கப்பாடி, ஆலம்பாடி, டி.அம்மாபேட்டை, வேடகட்டமடுவு, மேல்செங்கப்பாடி உள்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் அ. சண்முகம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பேசியதாவது:

வரலாற்று சிறப்பு மிக்க தீா்த்தலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலுக்கு தேவையான குடிநீா், மின் விளக்குகள், வாகன நிறுத்தமிடங்கள், பக்தா்கள் தங்குவதற்கான கட்டட வசதிகள், பழுதாகியுள்ள சமுதாய மண்டபங்கள் புதுப்பிப்பு என பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்துதருவேன்.

அதேபோல கத்தரிப்பட்டி, கட்டரசம்பட்டி, டி.அம்மாபேட்டை பகுதிகளுக்கு கூடுதல் அரசு பேருந்துகள் சென்றுவரவும், கிராமப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் படிப்பதற்கு தேவையான நூலக கட்டட வசதிகளை ஏற்படுத்துவேன். பாம்பாறு அணையின் வாய்க்கால் சீரமைப்பு, ஏரிகள், குளம் குட்டைகளை தூா்வார தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றாா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையவும், அரூா் தொகுதி வளா்ச்சி பெறவும் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.