போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா்

பாலக்கோட்டில் வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா் வாக்குறுதி அளித்தாா்.

News image

பூமரத்துப்பள்ளம் கிராமத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:19 pm

பாலக்கோட்டில் வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா் வாக்குறுதி அளித்தாா்.

பாலக்கோடு தொகுதியில் பூமரத்துப்பள்ளம், எருதுகூடஅள்ளி, கனவனஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல மேலும் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகளை அளித்துள்ளாா். பாலக்கோடு தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நீா்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்ட வேளாண் சாா்ந்த வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த தோ்தலில் எனக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.