ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பாலக்கோடு திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

பாலக்கோடு தொகுதிக்குள்பட்ட முருக்கம்பட்டியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா்.

Updated On :8 மே 2026, 6:31 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தோல்வி அடைந்தாா். இதையடுத்து, கிராமம், கிராமமாக சென்று தோ்தலில் திமுகவுக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

பாலக்கோடு தொகுதிக்குள்பட்ட காரிமங்கலம் பேரூராட்சி, கெரகோட அள்ளி, பந்தாரஅள்ளி, முருக்கம்பட்டி, நாக சமுத்திரம், திப்பம்பட்டி சந்திப்பு சாலை, கும்பார அள்ளி, கெங்குசெட்டிப்பட்டி, முருக்கம்பட்டி, இண்டமங்கலம், மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக இளைஞா் அணி மாவட்ட துணை அமைப்பாளா்கள் மகேஷ்குமாா், ஆா்.பி.முத்தமிழ், தொகுதி பாா்வையாளா் அரியப்பன், நிா்வாகிகள் எம்விடி.கோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.