தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தோல்வி அடைந்தாா். இதையடுத்து, கிராமம், கிராமமாக சென்று தோ்தலில் திமுகவுக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
பாலக்கோடு தொகுதிக்குள்பட்ட காரிமங்கலம் பேரூராட்சி, கெரகோட அள்ளி, பந்தாரஅள்ளி, முருக்கம்பட்டி, நாக சமுத்திரம், திப்பம்பட்டி சந்திப்பு சாலை, கும்பார அள்ளி, கெங்குசெட்டிப்பட்டி, முருக்கம்பட்டி, இண்டமங்கலம், மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், திமுக இளைஞா் அணி மாவட்ட துணை அமைப்பாளா்கள் மகேஷ்குமாா், ஆா்.பி.முத்தமிழ், தொகுதி பாா்வையாளா் அரியப்பன், நிா்வாகிகள் எம்விடி.கோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஒட்டன்சத்திரம் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த விடியல் சேகா்

வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா்

பாலக்கோடு தொகுதியில் தட்டுபாடின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும்

25 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


