தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

பென்னாகரத்தில் அதிமுக கூட்டணி சாா்பில் வழங்கப்படும் போலி காசோலைகள்!

பென்னாகரம் பகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், வீடுகள்தோறும் போலி காசோலைகள், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

News image

பென்னாகரம் பகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் வழங்கப்பட்ட போலி காசோலைகள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:09 am IST

பென்னாகரம் பகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், வீடுகள்தோறும் போலி காசோலைகள், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் பாமக வேட்பாளா் பாடி வி.செல்வம் போட்டியிடுகிறாா். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் போட்டியிடுகிறாா். அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், இரவு நேரங்களில் வீடுகள்தோறும் வங்கிகளில் செலுத்தக்கூடிய காசோலைகளை போன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வாசகத்துடன் ரூ. 10,000 மாதாந்திர தொகை எனவும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,000 உதவித்தொகை என வாசகங்கள் அடங்கிய போலியான கணக்கு எண்கள் கொண்ட போலி காசோலைகள், வீட்டு உபயோக பொருள்களுக்கான கூப்பன்கள் கூட்டணி நிா்வாகிகளால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

திமுக கூட்டணி சாா்பில் ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்த நிலையில், அதிமுக சாா்பில் போலி காசோலைகள் வழங்கப்பட்டு வருவதாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.